search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அதர்வா
    X
    அதர்வா

    கொரோனாவில் இருந்து மீண்ட அதர்வா

    மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    தமிழகத்தில் கொரோனாவின் 2-அலை வேகமாக பரவி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில், மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அதர்வா

    இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இருப்பதாக அதர்வா கூறி இருக்கிறார். மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும், நலமுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

    Next Story
    ×