search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மாதவன்
    X
    மாதவன்

    கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி

    தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் மாதவன், கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.
    கடந்த மாதம் 25ம் தேதி மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் 14 நாட்கள் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். தற்போதைய சோதனையில் மாதவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள மாதவன், ''எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. 

    மாதவன்

    அம்மா உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளது. வைரஸ் தொற்று நிலையை முற்றிலுமாக கடந்து வந்துவிட்டோம். கடவுள் அருளால் அனைவரும் நலமுடன் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறார்.
    Next Story
    ×