என் மலர்
சினிமா

கணவருடன் உத்ரா உன்னி
ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்ட நடிகை
மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் நடிகை உத்ரா உன்னி, ஒரு வருடத்திற்குப் பிறகு காதலரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் நடிகை உத்ரா உன்னி. இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவர்களது திருமண கொண்டாட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு இவர்கள் திருமணம் இன்று எளிமையாக கேரளாவில் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படங்களை உத்ரா உன்னி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இவரது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Story






