என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? - தீயாய் பரவும் தகவல்
Byமாலை மலர்13 Jan 2021 9:20 AM GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார். கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின், பிக்பாஸ் வழங்கிய தொகையை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.
அதேபோல் இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி, ரியோ ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வழங்கும் தொகையை வாங்கிக் கொண்டு வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது உண்மையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X