என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
லாஸ்லியா தந்தை திடீர் மரணம்... உண்மை காரணத்தை கூறிய உறவினர்
Byமாலை மலர்19 Nov 2020 4:36 PM GMT (Updated: 19 Nov 2020 4:36 PM GMT)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்து வெளியாகி வரும் செய்திகளுக்கு அவரது உறவினர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் அவரது தந்தை மரியநேசன் கனடாவில் பணியாற்றி வந்தார். அவர் இறந்த செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனிடையே சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறதை காணமுடிகிறது. இதனை அறிந்த லாஸ்லியாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தற்போது உண்மைகளை உடைத்துள்ளார். அவர் கூறும் பொழுது "லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடலை இலங்கை கொண்டு வர இரண்டு வாரங்கள் ஆகும். கொரோனா காரணமாக இந்த கால தாமதம் தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அவரது இறப்பு இயற்கையானது. தயவு செய்து பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X