என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஒரு தரமான சம்பவம் இருக்கு - ‘சூர்யா 40’ குறித்து பாண்டிராஜ் டுவிட்
Byமாலை மலர்26 Oct 2020 8:44 AM GMT (Updated: 26 Oct 2020 10:50 AM GMT)
சூர்யாவின் 40-வது படத்தை இயக்க உள்ள பாண்டிராஜ், ஒரு தரமான சம்பவம் இருக்கு என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் 38-வது படம் சூரரைப் போற்று. இப்படம் வருகிற நவம்பர் 12-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து சூர்யாவின் 39-வது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். வாடிவாசல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், சூர்யாவின் 40-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘சூர்யா 40’ படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்றும் இதில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் குறித்து டுவிட்டரில் பாண்டிராஜ் பதிவிட்டுள்ளதாவது: “இருக்கு ஒரு தரமான சம்பவம். மீண்டும் சூர்யா மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்தது செம்ம ஹாப்பி” என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X