என் மலர்
சினிமா

விஜய் யேசுதாஸ்
இனி அந்த மொழி படங்களில் பாடமாட்டேன் - விஜய் யேசுதாஸ் அதிரடி அறிவிப்பு
பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், இனி அந்த மொழி படங்களில் பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
கே.ஜே.யேசுதாசின் மகனும் பிரபல பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸ் இனிமேல் மலையாள படங்களில் பாட மாட்டேன் என்று கூறியுள்ளார். மலையாள திரையுலகில் தமக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அங்கு பலமுறை அவமானங்களை சந்தித்ததாகவும் விஜய் யேசுதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள படங்களில் பாடி தமது திரைப்பயணத்தை தொடங்கிய விஜய் யேசுதாஸ், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவற்றுள் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இவர் மூன்று முறை கேரள அரசின் விருதையும், ஐந்து முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். இவர் படைவீரன், மாரி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






