search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஷிகா மல்கோத்ரா
    X
    ஷிகா மல்கோத்ரா

    நர்சாக சேவை செய்த நடிகைக்கு கொரோனா

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி சேவை செய்த இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
    இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா நர்ஸ் படிப்பில் பட்டம் பெற்றவர். கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கிய காலம் முதல் நர்ஸ் பணிக்கு திரும்பி கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்காக பணிபுரிந்து வந்தார். 

    நடிகையாக இருந்து, நர்ஸ் பணிக்கு திரும்பும் ஆவலைக் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் படித்து நர்ஸ் பட்டம் பெற்றேன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர முடிவு செய்தேன். நர்சாக, நடிகையாக நாட்டிற்கு சேவை செய்ய ஆவலாக உள்ளேன். தயவு செய்து வீட்டில் இருங்கள். அரசுக்கு ஆதரவு அளியுங்கள் என்று தெரிவித்திருந்தார். 

    ஷிகா மல்கோத்ரா

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வார்டுகளில் பணிபுரிந்து வந்த ஷிகா மல்கோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அலட்சியம் காட்டாமல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×