என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி.... மீண்டும் தள்ளிப்போகும் ஜேம்ஸ் பாண்ட் படம்
Byமாலை மலர்5 Oct 2020 8:28 AM GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. தற்போது 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கிறார். இதுவரை 4 தடவை இந்த வேடத்தை ஏற்றுள்ள அவருக்கு இது ஐந்தாவது படம். இது தனது கடைசி படம் என்றும், இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்றும் டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். எனவே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
படத்தை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பரவலால் லண்டனில் நவம்பர் 12-ந்தேதியும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் நவம்பர் 25-ந்தேதியும் வெளியாகும் என்று தள்ளி வைத்தனர். ஆனால் கொரோனா பரவல் நீடிப்பதாலும் பல நாடுகளில் தியேட்டர்களை திறக்காததாலும் நோ டைம் டூ டை படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி ரிலீசாகும் என்று தற்போது அறிவித்து உள்ளனர். இது ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X