என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கைதான நடிகைகளின் மொபைலில் ஆபாச படங்கள்.... போதைப்பொருள் வழக்கு பாலியல் வழக்காக மாறுகிறதா?
Byமாலை மலர்1 Oct 2020 9:33 AM GMT (Updated: 1 Oct 2020 9:33 AM GMT)
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகளின் போன்களில் இருந்து ஆபாச படங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், போதைப்பொருள் விவகாரம் குறித்த தகவல்கள், ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணியின் செல்போன்களில் இருக்குமா என்பதை அறிய, இருவரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அந்த போனிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை ரிக்கவரி செய்து போலீசார் ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது.
அப்போது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் ஆகியவை இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சஞ்சனாவின் போனில் பாலியல் தொடர்பான ஒரு வாட்ஸ்-அப் குரூப் இருந்ததாகவும், சஞ்சனா கைதான பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து போதை பொருள் விவகாரம் மட்டுமின்றி பாலியல் விவகாரம் குறித்தும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X