search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    திரிஷா
    X
    திரிஷா

    கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா

    கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயலால் சிலாகித்துப்போன நடிகை திரிஷா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.


    கொரோனா ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வீடியோ பதிவிடுவது என ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

    அந்த வகையில் ரசிகர் ஒருவர் திரிஷாவின் முகத்தை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், அவர் கண்ணைக் கட்டிக்கொண்டு வரைந்துள்ளார். ரசிகரின் இந்த திறமையை பார்த்து சிலாகித்துப்போன திரிஷா அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×