search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சுந்தர் சி
    X
    சுந்தர் சி

    சுந்தர் சி-யின் அடுத்த படம்... நேரடியாக டி.வி.யில் வெளியிட திட்டம்?

    சுந்தர் சி-யின் அடுத்த படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் சுந்தர் சி, தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் அடுத்ததாக ‘மாயாபஜார்’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், யோகி பாபு, அஸ்வின், வி.டி.வி.கணேஷ், ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ருதி மராத்தே, ரித்திகாசென், மாஸ்டர் சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    படக்குழுவினருடன் சுந்தர் சி

    இந்நிலையில், இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக சன் டி.வி.யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் இதனை வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சன் நிறுவனத்தின் இந்தத் திட்டம், திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×