search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காதலனுடன் சரண்யா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்
    X
    காதலனுடன் சரண்யா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்

    கடலுக்கடியில் காதல் - வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஷூட்

    பிரபல நடிகை ஒருவர் தனது காதலனுடன் கடலுக்கடியில் நடத்திய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    சினிமா நடிகைகளுக்கு போட்டியாக தற்போது சீரியல் நடிகைகளும் வித விதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் நடிகை சரண்யா சமீபத்தில் தனது காதலனுடன் நடத்திய போடோஷூட் மிகவும் வைரலானது. அதில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அந்த போட்டோஷூட்டை அவர்கள் கடலுக்கடியில் நடத்தி உள்ளனர். 

    இந்தியாவிலேயே கடலுக்கடியில் ஜோடியாக எடுத்த முதல் போட்டோ ஷூட் இது தானாம். இதுகுறித்து சரண்யா கூறியதாவது: சுறாக்கள் நிறைந்த கடலில் போட்டோஷூட் நடத்தியது பயமாக இருந்தாலும் புது அனுபவமாக இருந்தது. நீச்சல் உடைகள் இல்லாமல் சாதாரண உடையில் கடலுக்கடியில் இருப்பது சவாலாக இருந்தது. காதல் இவை அனைத்தையும் மறக்கடித்து விட்டது என கூறியுள்ளார்.

    காதலனுடன் சரண்யா

    தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சரண்யா. இவர் ராகுல் என்பவரைக் காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். 
    Next Story
    ×