என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நயன்தாரா பட இயக்குனருடன் இணையும் ராணா
Byமாலை மலர்3 Sep 2020 8:02 AM GMT (Updated: 3 Sep 2020 8:02 AM GMT)
நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை இயக்கும் மிலிந்த் ராவ் அடுத்ததாக ராணா நடிக்கும் திரில்லர் படத்தை இயக்க உள்ளாராம்.
சித்தார்த் நடித்த 'அவள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிலிந்த் ராவ். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டுள்ளது. இது பிளைண்டு எனும் கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து ராணா நடிக்கவுள்ள படத்தை மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் அச்சன்டா கோபிநாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது. அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை எடுக்க இருக்கிறாராம் மிலிந்த் ராவ்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X