என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பாலாவின் ‘வர்மா’ ஓடிடி தளத்தில் ரிலீசாகிறதா? - தயாரிப்பாளர் விளக்கம்
Byமாலை மலர்2 Sep 2020 9:30 AM GMT (Updated: 2 Sep 2020 9:30 AM GMT)
பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதன் தயாரிப்பாளர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா இயக்கி இருந்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து திரும்ப எடுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். சொன்னபடியே ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, வர்மா படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் ரடிலால் அப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது வெறும் வதந்தி எனவும் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X