என் மலர்
சினிமா

எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பி. உடல்நிலை எப்படி இருக்கு? - தங்கை சைலஜா சொன்ன குட் நியூஸ்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அவரது தங்கை எஸ்.பி.சைலஜா விளக்கம் அளித்துள்ளார்.
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து அவரது தங்கை எஸ்.பி.சைலஜா ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி-யின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை அளிக்க தொடங்கி உள்ளனர். அவருக்கு நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல அறிகுறியாகும். டாக்டர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர் குணமடைய நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், உலகம் முழுவதும் அவரைத் திரும்பப் பார்க்க விரும்புகிறது. இந்த பின்னடைவுக்குப் பிறகு எனது சகோதரர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘அண்ணையா’ இதிலிருந்து மீள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






