என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி
Byமாலை மலர்6 Aug 2020 2:09 PM GMT (Updated: 6 Aug 2020 2:09 PM GMT)
பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி, ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். தற்போது பார்வதி சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நீண்டநாள் ஆசையான மூக்குத்தி குத்திக்கொள்ளும் வைபவத்தை தனது வீட்டிலேயே அரங்கேற்றி இருப்பதாக பார்வதி பதிவு செய்துள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள பார்வதி, “உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் மூக்குத்தி குத்திக்கொண்டேன். மூக்குத்தி அணிந்த பின்னர் நானும் எனது தாயைப்போலவே இருப்பதை உணர்ந்தேன். அம்மா குட்டியைப்போல ஒரு அம்மிணிக்குட்டி” என்று கூறியதுடன் தனது தாயின் மூக்குத்தி அணிந்த புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X