search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பஷீர்
    X
    பஷீர்

    சாலை ஓரம் வசிப்பவர்களுக்கு உணவளித்து வரும் பஷீர்

    கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான பஷீர் உதவி செய்திருக்கிறார்.
    கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர் சென்னையில் சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் இரவில் உணவு அளித்து வருகிறார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர், குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். 

    பஷீர்

    மேலும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் பசும்பொன் தேவர் வேடத்தில் பஷீர் நடித்து வருகிறார்.
    Next Story
    ×