என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன்
Byமாலை மலர்8 July 2020 7:00 AM GMT (Updated: 8 July 2020 7:00 AM GMT)
நடிகர் பார்த்திபன், கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் பேசி இருப்பதாவது: “சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை? போனவர் எத்தனை? கண்டது எத்தனை? கொண்டது எத்தனை? என் பலம் எனதல்ல.
பேரிடர்கள் வென்ற சாதனை மைல்கற்களே என் வரலாறு.
— SP Velumani (@SPVelumanicbe) July 6, 2020
ஆயிரமாயிரம் களப்பணியாளர்கள் அரசின் முயற்சிகளோடு இணைந்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகல் கடைபிடித்து, தற்காத்து இம்முறையும் இடர் வெல்வேன். மீண்டும், மீண்டு வருவேன்!#வீழ்வேனென்றுநினைத்தாயோ#நான்சென்னை@chennaicorp@rparthiepanpic.twitter.com/U5X8KwG224
என்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம். நீரால், நெருப்பால், நிலத்தால் காற்றால் எவ்வழி இடர் வரினும் தளர் வரினும் என் கரம் இறுக பற்றும் என் மக்களே என் பலம். என் மக்கள் மனதில் தன்னம்பிக்கையும் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலோடு.. இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு தோள் கொடுப்பர். வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன். நான் சென்னை, என்னை வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன் நான் சென்னை.” இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X