என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சினிமா படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மரணம்
Byமாலை மலர்26 Jun 2020 9:33 AM GMT (Updated: 26 Jun 2020 9:33 AM GMT)
ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் உள்பட 150 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜெயச்சந்திரன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
சினிமா படத்தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பால் நேற்றுமரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. விஜயகாந்த் நடித்து, திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'ஊமை விழிகள்' படத்தில், படத்தொகுப்பாளராக ஜெயச்சந்திரனை, தயாரிப்பாளர் ஆபாவாணன் அறிமுகம் செய்தார்.
அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'உழவன் மகன்', 'பூந்தோட்ட காவல்காரன்', 'உரிமை கீதம்', 'புதுப்பாடகன்', 'புலன் விசாரணை', "கேப்டன் பிரபாகரன்' உள்பட 150 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக ஜெயச்சந்திரன் பணியாற்றினார்.
அவர் சென்னை மேடவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு தேவி என்ற மனைவியும், அருள்முருகன், பாலமுருகன் என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள். அவருடைய உடல் தகனம் மடிப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X