search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    லாவண்யா திரிபாதி
    X
    லாவண்யா திரிபாதி

    நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா

    நெருக்கமான காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று நடிகை லாவண்யா திரிபாதி கூறியுள்ளார்.
    தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் இனிவரும் நாட்களில் கதாநாயகர்களுடன் மிக நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகளை தவிர்த்து விடுவேன் என கூறியுள்ளார். 

    கொரோனா தாக்கம் முடிந்தபின்பு படப்பிடிப்புகள் துவங்கினாலும் நிச்சயம் பல மாற்றங்கள் அதில் காணப்படும் என கூறியுள்ள லாவண்யா திரிபாதி, கட்டாயம் அரசு விதிக்கும் விதிமுறைகளை பின்பற்றித்தான் படப்பிடிப்பு நடக்கும் என கூறியுள்ளார். அதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
    Next Story
    ×