என் மலர்tooltip icon

    சினிமா

    வெங்கட் பிரபு
    X
    வெங்கட் பிரபு

    மதுக்கடைகள் கொரோனாவை பரிமாறப்போகிறது - வெங்கட் பிரபு

    மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து, பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    வெங்கட் பிரபு

    அந்தவகையில் இயக்குனர் வெங்கட் பிரபு வட மாநிலங்களில் மதுபான கடைகள் முன்னால் ஏராளமானோர் திரண்டு மதுபானங்கள் வாங்கி குவித்த வீடியோவை பார்த்துவிட்டு வெளியிட்ட பதிவில் “இந்த வீடியோக்களை பார்க்கும்போது, எல்லா மதுபான கடைகளும் கொரோனாவை பரிமாறப்போகிறது என்று உணர்கிறேன். நிறைய பேர் வாங்கி இருப்பு வைத்து விட்டதாக சொல்வார்கள். ஏழைகள் என்ன செய்வார்கள். எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாள் ஆகிவிட்டது. பாதுகாப்பு முக்கியம்” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×