என் மலர்
சினிமா

நடிகர் செந்தில்
அது நான் இல்லை... அது பற்றி எதுவும் தெரியாது - காமெடி நடிகர் செந்தில்
அது நான் இல்லை... அது பற்றி எதுவும் தெரியாது என்று காமெடி நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் செந்தில் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளதாக வேகமாக செய்திகள் பரவி வருகிறது.

மேலும் அந்த ட்விட்டர் கணக்கில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. "நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன்."
"கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோசம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன். அனைவரின் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து நடிகர் செந்திலிடம் விசாரித்த போது, அது நான் இல்லை. டுவிட்டர் என்றால் என்ன... அது பற்றி எதுவும் தெரியாது. அது போலியானது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் செந்தில் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளதாக வேகமாக செய்திகள் பரவி வருகிறது.

"கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோசம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன். அனைவரின் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து நடிகர் செந்திலிடம் விசாரித்த போது, அது நான் இல்லை. டுவிட்டர் என்றால் என்ன... அது பற்றி எதுவும் தெரியாது. அது போலியானது என்று கூறியுள்ளார்.
Next Story






