என் மலர்tooltip icon

    சினிமா

    மருந்து பொருட்கள் வழங்கும் நடிகர் டைகந்த்
    X
    மருந்து பொருட்கள் வழங்கும் நடிகர் டைகந்த்

    ஏழை நோயாளிகளுக்கு தேடிச்சென்று மருத்துவ உதவி செய்யும் நடிகர்

    கொரோனா ஊரடங்கால் மருத்துவ உதவி கிடைக்காமல் தவிக்கும் ஏழை நோயாளிகளுக்கு நடிகர் ஒருவர் தேடிச்சென்று உதவி செய்து வருகின்றனர்.
    கொரோனா. இந்த வார்த்தையை கேட்டாலே உலக நாடுகளும் மிரண்டு கிடக்கின்றன. இந்தியாவில் இதன் வேகம் அதிகமாக இருப்பதால் மே 17-ந்தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கால் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, நீரிழிவு நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் டைகந்த் தலைமையில் ரைடர்ஸ் குடியரசு மோட்டார் கிளப் சார்பில் ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினர் நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்து, மாத்திரைகளை வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார்கள்.

    நேற்று இந்த குழுவினர், கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மருந்து வழங்கினர். ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் இந்த குழுவினர் ஏழை நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவர்களின் சேவையை பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் பீமா சங்கர் குலீத் பாராட்டினார். இதில் நடிகர் டைகந்தின் மனைவியும், நடிகையுமான அந்திர்தா ராய், ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×