search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரபாஸ்
    X
    பிரபாஸ்

    பாகுபலி கொண்டாட்டம் - நன்றி தெரிவித்த பிரபாஸ்

    உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி படத்தின் 3 ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிரபாஸ் நன்றி தெரிவித்து உள்ளார்.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் வெளியானது.

    பாகுபலி 2 வெளியாகி 3 வருடங்களை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினர். இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பிரபாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    பிரபாஸ்
    அதில் 'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட.  மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன்.  மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு  வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து  மகிழ்கிறேன் என்றார்.
    Next Story
    ×