என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திருமணமானதை மறைத்து காதல் லீலை.... நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்
Byமாலை மலர்24 April 2020 4:13 AM GMT (Updated: 24 April 2020 4:13 AM GMT)
திருமணமானதை மறைத்து காதலித்து ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் மீது நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் இந்தி நடிகர் அர்ஹான் கானும் தொலைக்காட்சி தொடர்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ள நடிகை ரஸாமி தேசாயும் பங்கேற்றனர். பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சல்மான்கான், ஏற்கனவே அர்ஹான் கானுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரிய வந்தது. இதனை அறிந்த ரஸாமி தேசாய் அதிர்ச்சியாகி காதலை முறித்துக்கொண்டார். ரஸாமியின் வங்கி கணக்கில் இருந்து அர்ஹான் கான் பணம் எடுத்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஸாமியிடம் அர்ஹான் கான் பணமோசடி செய்ததாக ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரலாக்கினர்.
இந்த நிலையில் பணமோசடி குறித்து ரஸாமி அளித்துள்ள பேட்டியில் “நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளனர். அர்ஹான் கான் எனது பணத்தை எதற்காக என்னுடைய வங்கி கணக்கில் இருந்து எடுத்தார் என்பது தெரியாது. இதன் மூலம் அர்ஹான்கான் எனக்கு ரூ.15 லட்சத்துக்கும் மேல் பணம் தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை அவர் தர மறுக்கிறார். இந்த சம்பவம் என்னை மன ரீதியாக பாதித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
அர்ஹான் கான் கூறும்போது, “ரஸாமியின் நிறுவனத்தில் நானும் பங்குதாரராக இருக்கிறேன். எனது லாபம் மற்றும் கடனை திருப்பி தந்ததன் மூலம் இந்த தொகை எனக்கு வந்து இருக்கலாம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X