என் மலர்tooltip icon

    சினிமா

    ராஜ் தீபக் ஷெட்டி, சோனியா
    X
    ராஜ் தீபக் ஷெட்டி, சோனியா

    கொரோனா ஊரடங்கால் திருமணத்தை ஒத்திவைத்த நடிகர்

    கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிரபல நடிகர் தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ளார்.
    பிரபல கன்னட சினிமா நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி. இவர், ‘பஞ்சதந்திரா, பர்ஜரி, கோடிகொப்பா-3’ உள்பட 30 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

    இவர்களது திருமணம் மே மாதம் 17-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி தனது திருமணத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.
    Next Story
    ×