search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தயாரிப்பாளர் சங்கம் லோகோ
    X
    தயாரிப்பாளர் சங்கம் லோகோ

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மேலும் ஒரு புதிய அணி போட்டி

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏற்கனவே 3 அணிகள் போட்டியிடும் நிலையில், தற்போது 4-வதாக புதிய அணி களமிறங்க உள்ளது.
    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். வருகிற 2 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், ஜூன் 21-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். 

    இந்த தேர்தலில் டி.சிவா தலைமையில் ஒரு அணி, மறைந்த ராமநாராயணின் மகன் முரளி தலைமையில் ஒரு அணி, டி.ஜி.தியாகராஜன் தலைமையில் ஒரு அணி ஆகிய 3 அணிகள் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    தயாரிப்பாளர் சங்கம் லோகோ

    இந்த நிலையில், “குறைந்த முதலீட்டு பட அதிபர்கள் சார்பில் செந்தில் ஆனந்த், கமலக்கண்ணன் ஆகியோர் தலைமையில் 4-வது அணியாக போட்டியிட இருக்கிறோம்” என்று ஒரு புதிய அணி அறிவித்து இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள், மே 19-ந்தேதி. வாபஸ் பெற கடைசி நாள், மே 24-ந்தேதி ஆகும். 

    பட அதிபர்கள் தங்கள் அணிகளுக்கு இப்போதே ஆதரவு திரட்ட தொடங்கி விட்டார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஓட்டுப்போட தகுதி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,300 பேர். இவர்கள் ஓட்டுப்போட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
    Next Story
    ×