search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    குழந்தையுடன் அம்ரீஷ்
    X
    குழந்தையுடன் அம்ரீஷ்

    குழந்தை பிறந்த நாளில் 100 எளியவர்களுக்கு அரிசி மூட்டை வழங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ்

    தன்னுடைய குழந்தை பிறந்தநாளில் 100 எளியவர்களுக்கு அரிசி மூட்டை வழங்கி இருக்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ்.
    கொரோனா வைரஸ் உலகை முடக்கிப்போட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே திண்டாடி வருகின்றன. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது. எளியவர்கள் பலருக்கு வெளியில் நடமாட முடியாத சூழல் இருப்பதால்,  எந்த ஒரு பணியும்  இல்லை, கையில் பணமும் இல்லை. இதனால்  நம்  நாட்டிலும் பெருமளவு ஏழைகள் உணவிற்கே திண்டாடும் நிலையும் உருவாகி வருகிறது. 

    இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம்  நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள்  100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார். பிரபல நடிகை  Dr. ஜெயசித்ரா   அவர்களின் புதல்வனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரீஷ் வழக்காமாகவே தனது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நல்ல நாட்களை  முதியோர் மற்றும்  ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

    இந்த நிலையில் இன்று (31.03.2020)  மார்ச் 31 தனது  பெண்குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை,வெகு வித்தியாசமான வகையில் கொண்டடியுள்ளார் அம்ரீஷ். கொரொனா வைரஸ் தனிமைப்படுத்தல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் தனிமைப்பட்டிருப்பதால தன் குழந்தையின் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று கொண்டாட  முடியாத காரணத்தால் எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை அரிசி வழங்கி கொண்டாடியிருக்கிறார். இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் பிரபுதேவா நடிகர் லாரன்ஸ் முதலாக பல பிரபலங்களும் இவரது செயலை பாராட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். 
    Next Story
    ×