search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கவுதமி
    X
    கவுதமி

    கொரோனா நோட்டீஸ் ஒட்டினாலும் கவலை இல்லை - கவுதமி

    நடிகை கவுதமி தனது வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டவில்லை என்றும், அப்படியே இனிமேல் ஒட்டினாலும் கவலையில்லை எனவும் கூறியுள்ளார்.
    நடிகை கவுதமி வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதால் சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். மேலும் அங்கு கிருமிநாசினி திரவத்தையும் தெளித்தனர். ஆனால் கவுதமி தற்போது கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை கவுதமி கூறுகையில், ‘‘நான் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில் அமெரிக்கா சென்று திரும்பினேன். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. 

    கவுதமி

    என்னை யாரும் சோதனைக்கும் உட்படுத்தவில்லை. இப்போது நான் கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கிறேன். என் வீட்டின் முன்பு எந்த நோட்டீசும் ஒட்டவில்லை. அப்படியே இனிமேல் ஒட்டினாலும் கவலையில்லை’’ என்றார். முன்னதாக கவுதமியின் பாஸ்போட்டில் இருந்த முகவரியை வைத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியதால், பெரும் சர்ச்சை ஆனது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றினார்கள்.
    Next Story
    ×