என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீண்டும் தெகிடி பட இயக்குனருடன் கைகோர்க்கும் அசோக் செல்வன்?
Byமாலை மலர்22 March 2020 10:15 AM GMT (Updated: 22 March 2020 10:03 AM GMT)
நடிகர் அசோக் செல்வன், தெகிடி பட இயக்குனர் ரமேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் சூதுகவ்வும், பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது மலையாளத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் அரபிக்கடலிண்டே சிம்ஹம் எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் மலையாளப்படம் இதுவாகும். அதேபோல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தமிழில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தெகிடி பட இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படமும் தெகிடி பட பாணியில் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X