search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரபாஸ்
    X
    பிரபாஸ்

    அவர் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம் - பிரபாஸ்

    பாகுபலி படம் மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ், அவர் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.
    'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

    தற்போது பிரபாஸ், 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா. இந்தப் படம் இப்போதைக்கு 'பிரபாஸ் 20' என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பிரபாஸ்

    வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது. இயக்குனர் நாக் அஷ்வின் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகாநடி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நடந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று நடிகர் பிரபாஸ் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×