search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வரலட்சுமி சரத்குமார்
    X
    வரலட்சுமி சரத்குமார்

    பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் - வரலட்சுமி பகீர் புகார்

    பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் தன்னிடம் கேட்டதாக நடிகை வரலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது நடக்கிறது. சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ மூலம் நடிகைகள் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும், தான் இதுபோன்ற பிரச்சினையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    வரலட்சுமி சரத்குமார்

    அதில், ‘’தான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம் கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தயார் செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×