search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஓ மை கடவுளே படக்குழு
    X
    ஓ மை கடவுளே படக்குழு

    ‘ஓ மை கடவுளே’ இரண்டாம் பாகம் உருவாகும் - அஷ்வத் மாரிமுத்து

    ‘ஓ மை கடவுளே’ படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
    அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். காதல், பேண்டசி படமாக உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.

    ஓ மை கடவுளே படக்குழு

    அதில் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து பேசியதாவது: ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதைக்காக 5 ஆண்டுகள் உழைத்தேன். படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு உற்சாகத்தை தருகிறது. அடுத்ததாக ‘ஓ மை கடவுளே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகிறேன். இந்த படத்திற்கான வேலைகள் அடுத்தாண்டு தொடங்கும். முதல் பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என அவர் கூறினார்.
    Next Story
    ×