என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரொமாண்டிக் படத்திற்காக குண்டான அசோக் செல்வன்
Byமாலை மலர்23 Jan 2020 7:05 AM GMT (Updated: 23 Jan 2020 7:05 AM GMT)
நடிகர் அசோக் செல்வன், தான் அடுத்ததாக நடிக்க உள்ள ரொமாண்டிக் படத்திற்காக தனது உடல் தோற்றத்தை மாற்றியுள்ளார்.
தமிழில் சூதுகவ்வும், பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீசாக உள்ளது.
இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மலையாளத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் அரபிக்கடலிண்டே சிம்ஹம் எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் மலையாளப்படம் இதுவாகும்.
இந்நிலையில், அவர் அறிமுகமாகும் தெலுங்கு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் அனி சசி இயக்கும் ரொமாண்டிக் படத்தில் அசோக் செல்வன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நித்யா மேனன், ரித்து வர்மா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் அசோக் செல்வன் 100 கிலோ எடையுடன் கூடிய சமையல் கலைஞர் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்காக அவர் 20 கிலோ உடல் எடையை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X