search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    செரா நேதன்
    X
    செரா நேதன்

    பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்

    விமான நிலையத்தில் நடிகை அரைகுறை ஆடையில் காதலருடன் சில்மி‌ஷம் செய்ததால், அவரை அதிகாரிகள் வெளியே அனுப்பினார்கள்.
    ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடிகை செரா நேதன். இவர் ஒரு எழுத்தாளர். சமீபத்தில் மெல்பர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்தில் தன் காதலருடன் காத்துக் கொண்டு இருந்தார். அப்போது காலியாக இருந்த இருக்கையில் அமராமல் தனது காதலரின் மடியில் அமர்ந்து கொஞ்சி பேசிக்கொண்டிருந்தார்.

    அவர் அரைகுறையாக ஆடை அணிந்திருந்தார். இதை பார்த்த சிட்னி விமான நிலைய பெண் ஊழியர்கள் இருவர், செராவிடம் சென்று காலியாக உள்ள இருக்கையில் அமரும்படி கூறினர்.

    ஆனால் செரா அதை கேட்காமல், தொடர்ந்து காதலர் மடியில் அமர்ந்து இருந்தார். செராவின் செயலால் ஆத்திரம் அடைந்த விமான நிலைய ஊழியர்கள், குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் பொது இடத்தில் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என மீண்டும் எச்சரித்தனர். ஆனால் அப்போதும் செரா அவர்கள் பேச்சை கேட்க வில்லை.

    இதை அடுத்து மேலதிகாரியை அழைத்து செராவின் நடவடிக்கை பற்றி ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். நடிகை செரா உள்பனியன் போன்று மேலாடையும், டிராக் பேன்ட்டும் அணிந்திருப்பதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், அதையே காரணமாக கூறி செராவை காத்திருப்போர் அறையில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர்.

    செரா நேதன்

    இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செரா, விமான நிலையத்தில் தான் அணிந்திருந்த ஆடையில் என்ன தவறு இருக்கிறது என கேட்டு, அவருடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த உடையை அணிந்ததற்காக விமான நிலைய ஊழியர்களால் பொதுவெளியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் செரா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு புகார் ஒன்றையும் செரா அனுப்பியிருக்கிறார்.

    அவரது புகாருக்கு பதிலளித்த விமான நிறுவனம், “உங்களைத் தரக்குறைவாக நடத்தியதற்கு வருந்துகிறோம். பொது இடத்தில் காதலர் மடியில் அமர்வது சரியில்லை என்று ஊழியர்கள் கருதியுள்ளனர்’ என்று விளக்கம் அளித்துள்ளது.
    Next Story
    ×