என் மலர்
சினிமா

விக்ரம் 58 படப்பிடிப்பு தளத்தில் இர்பான் பதான்
விக்ரம் 58 படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இர்பான் பதான்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம் 58’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வெளியிட்டுள்ளார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் 58 படம் குறித்த முக்கிய அப்டேட்டை இர்பான் பதான் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: ”வணக்கம் மக்களே. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி. முதற்கட்ட படப்பிடிப்பு நல்லபடியா முடிந்தது. மீண்டும் எல்லாரையும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
Next Story






