search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சந்தோஷ் பி ஜெயக்குமார்
    X
    சந்தோஷ் பி ஜெயக்குமார்

    இருட்டு அறையில் முரட்டு குத்து 2-ம் பாகம் உருவாகிறது

    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அது, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதே நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்க மாட்டார்கள் என்றும், மாறாக புதுமுக நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இருட்டு அறையில் முரட்டு குத்து

    இப்படம் வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாகவும், இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பின் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×