என் மலர்
சினிமா

சிருஷ்டி டாங்கே
கிடைக்கிற வாய்ப்பை நிராகரிக்கிற ஆள் நான் இல்ல - சிருஷ்டி டாங்கே
தமிழில் மேகா படம் மூலம் மிகவும் பிரபலமான சிருஷ்டி டாங்கே, கிடைக்கிற வாய்ப்பை நிராக்கரிக்கிற ஆள் நான் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேகா படத்தில் இடம்பெற்ற புத்தம் புதுகாலை பாடல் மூலம் பிரபலமானவர் சிருஷ்டி டாங்கே. அடுத்து டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில காலம் ஒதுங்கி இருந்தவர் பி.லெனின் கதை, திரைக்கதை வசனத்தில் யமுனா ஈவி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் கட்டில் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் சிருஷ்டிக்கு ஒரு குழந்தைக்கு தாய் கதாபாத்திரம்.
கட்டில் படம் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’பேரை வைத்து எதுவும் முடிவு பண்ணிவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படம். ஒரு குடும்ப அமைப்புக்கும் கட்டிலுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனால் தான் இந்த பெயர். குடும்பத்துல இருக்குற உறவுமுறைகள், அவங்களுக்கு நடுவுல இருக்குற உணர்வுப் போராட்டங்கள்தான் இந்தப் படம்.

எமோஷனல் டிராமா. உலக சினிமா மாதிரி முயற்சி பண்றோம். நிறைய விருது விழாக்களுக்கு அனுப்புற ஐடியாவோடதான் இந்தப் படம் உருவாகுது. அதே நேரத்தில் கமர்சியல் விஷயங்களும் படத்தில் இருக்கும். படத்துல நான் ஹவுஸ் வைப். பத்து வருஷத்துல முதல் முறையா இப்படியொரு கேரக்டர்ல நடிக்கிறேன். நான் கிடைக்கிற வாய்ப்பை நிராகரிக்கிற ஆள் இல்ல. இதுவரை வந்த எல்லா வாய்ப்புகளிலுமே என்னால என்ன பண்ணமுடியுமோ அதப் பண்ணியிருக்கேன். ஆனா, எனக்குப் படங்கள்தான் சரியா அமையவில்லை. அந்த குறையை கட்டில் படம் போக்கும்’ என்று கூறினார்.
Next Story






