என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மாணவர்கள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்திய துருவ் விக்ரம்
Byமாலை மலர்27 Sep 2019 1:08 PM GMT (Updated: 27 Sep 2019 1:08 PM GMT)
நடிகர் விக்ரமின் மகனும் ஆதித்ய வர்மா படத்தின் நாயகனுமான துருவ் விக்ரம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாட்டு பாடி அசத்தி இருக்கிறார்.
தன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.
இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் துருவ் விக்ரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் இடம் பெற்ற ‘உன் விழிகளில்...’ என்ற பாடலை பாடி அசத்தி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X