என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்த பிரியாமணி
Byமாலை மலர்23 Sep 2019 3:54 AM GMT (Updated: 23 Sep 2019 3:54 AM GMT)
கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் பாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘கண்களால் கைது செய்’ படத்தில் அறிமுகமான பிரியாமணிக்கு பருத்தி வீரன் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், சாருலதா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.
பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான மனவூரி ராமாயணம் படத்தில் விலைமாதுவாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்தியில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.
இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:- “எனக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் ஏற்கவில்லை. நிறைய இந்தி கதாநாயகிகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். என்னால் அப்படி நடிக்க முடியாது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்தேன்.
அதற்கு விமர்சனங்கள் கிளம்பின. தென்னிந்திய ரசிகர்கள் பாரம்பரிய உடைகளில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தியில் அப்படி இல்லை. அங்கு கவர்ச்சியாக நடிக்கின்றனர். எனக்கு அப்படி கவர்ச்சியாக நடிப்பதில் உடன்பாடு இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X