search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மணிரத்னம்
    X
    மணிரத்னம்

    தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

    பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மணிரத்னம் தாய்லாந்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிவருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்தன. 

    மணிரத்னம்

    ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதிசெய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். 100 நாட்கள் கொண்ட ஒரே ஷெட்யூலில் படத்தின் முக்கியமான பாகங்களை தொடர்ந்து படமாக்க தயாராகி வருகிறார்கள். பொன்னியின் செல்வனை தாய்லாந்தின் அடர்ந்த காடுகளுக்குள் படமாக்க உள்ளார்கள். 
    Next Story
    ×