search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மணிரத்னம்
    X
    மணிரத்னம்

    பொன்னியின் செல்வன் டிசம்பரில் தொடக்கம்

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
    செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். திரிஷாவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. 

    யார் எல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்த ஒரு விபரத்தையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்த படத்துக்காக 12 பாடல்களை எழுத உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

    மணிரத்னம்

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 

    மேலும் இப்படத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னத்துடன் நாயகன், தளபதி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். 
    Next Story
    ×