search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஷ்ரத்தா கபூர்
    X
    ஷ்ரத்தா கபூர்

    சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்

    சாஹோ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தது மிகவும் சவாலாக இருந்ததாக ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.
    இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஷ்ரத்தா கபூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ‘ஓகே கண்மணி’ இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் தமிழில் ‘அருவி’ படம் பார்த்தேன். 

    எப்போதும் படப்பிடிப்பிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த படத்துக்காக இயக்குனர் என்னைத் தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார். இது ஒரு மும்மொழித் திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். 

    ஷ்ரத்தா கபூர்

    இந்த படம் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் என்பதால் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. முதன்முதலாக துப்பாக்கி பிடித்து நடித்தது கடினமாக இருந்தது. என் கைகள் சிறியதாக இருப்பதால் துப்பாக்கியை பிடிக்கும்போது கைகள் நடுங்கின. படத்தில்தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாக செய்துள்ளேன்” என்று கூறினார்.
    Next Story
    ×