என் மலர்
சினிமா

படைப்பாளன் படக்குழு
கதை திருட்டு சம்பவங்கள் படமாகிறது
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி படைப்பாளன் என்ற படம் உருவாகியுள்ளது.
பிரபுராஜா இயக்கி நடித்துள்ள இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பிரபுராஜாவுடன் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய கிருபாகரன் இசையமைத்துள்ளார்.
படைப்பாளன் படம் பற்றி எல்.எஸ்.பிரபுராஜா கூறியதாவது: ’சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை இது. முன்பெல்லாம் படத்தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு அவர்களை அழைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் ஒரு பிரபலமான இயக்குனர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள்.

அந்த உதவி இயக்குனரின் உழைப்பு, வலிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுக்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்த கதை பற்றியும் அவர் சொன்ன கதை பற்றியும் தான் இந்த படம். உதவி இயக்குநர்களின் வலிகளையும் இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்ட உள்ளது’. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






