search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சந்தானம்
    X
    சந்தானம்

    மூன்றாவது பாகத்திற்கு ரெடியான சந்தானம்

    காமெடி நடிகராக இருந்து தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், தற்போது ஒரு படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிக்க இருக்கிறார்.
    நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால், இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூலையும் பெற்றது. 

    இந்நிலையில் இதன் அடுத்த பாகமான 'தில்லுக்கு துட்டு 3'-ஐ 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சந்தானம் இப்போது யோகி பாபுவுடன் இணைந்து டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு படத்தையும் தயாரிக்க உள்ளார். முந்தைய பாகங்களை இயக்கிய ராம் பாலாவே இப்படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தில்லுக்கு துட்டு 2 படத்தில் சந்தானம்

    இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×