search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஷால், நாசர், பாக்கியராஜ், ஐசரி கணேசன்
    X
    விஷால், நாசர், பாக்கியராஜ், ஐசரி கணேசன்

    முடங்கிய தேர்தல் முடிவு- நடிகர் சங்க ஓட்டுகளை எண்ணுவது எப்போது?

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிந்து 37 நாட்கள் ஆகியும் இதுவரை ஓட்டுகள் எண்ணப்படவில்லை.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் நாசர், விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. மொத்தம் 1,604 பேர் ஓட்டுபோட்டனர். தபால் வாக்கு சீட்டுகள் தாமதமாக சென்றதால் வெளியூர்களில் இருந்த ரஜினிகாந்த் உள்பட பலர் வாக்களிக்க இயலவில்லை.

    தேர்தலை எதிர்த்து 62 உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்ததால் ஓட்டுகளை எண்ணுவதை கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதனால் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தல் முடிந்து 37 நாட்களாகியும் இதுவரை ஓட்டுகள் எண்ணப்படவில்லை.

    பாக்யராஜ், நாசர்

    இதனால் நடிகர் சங்க பணிகள் முடங்கி உள்ளன. சம்பள பிரச்சினை குறித்து நடிகர், நடிகைகளால் சங்கத்தில் புகார் அளிக்க முடியவில்லை என்று மூத்த நடிகர் ஒருவர் கூறினார். நடிகர் சங்க கட்டிட வேலையிலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஓட்டு பெட்டிகளை வைத்துள்ள வங்கிக்கு ஏற்கனவே 15 நாட்களுக்கு ரூ.50 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    விஷால், ஐசரி கணேசன்

    இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது ஓட்டுகளை எண்ணுவது பற்றிய முடிவை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுகள் எண்ணப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதும் உடனடியாக பொதுக்குழு கூட்டப்படும். நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×