என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகராகும் விக்ரம் தம்பி
Byமாலை மலர்30 July 2019 3:17 AM GMT (Updated: 30 July 2019 3:17 AM GMT)
நடிகர் விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர், ஏ.இருதயராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விக்ரம். இவரின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர், புதிதாக தயாராகும் ‘எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.இருதயராஜ் டைரக்டு செய்கிறார். சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை ஷைலா, டாக்டர் கீர்த்தவணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படம் பற்றி டைரக்டர் இருதயராஜ் கூறும்போது, “பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியாக வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிகம் கவலை அடைகின்றனர். இதற்கு ‘எப்போ கல்யாணம்’ படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருக்கிறோம். காதல், சோகம், நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X