என் மலர்tooltip icon

    சினிமா

    ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித்
    X
    ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித்

    வைரலாகும் அஜித்தின் செல்பி

    நடிகர் அஜித் முதன்முறையாக ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித்தை வைத்து தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என்றொரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 8-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், கூட்டம் கூட்டமாக தன்னை பார்க்க வந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அஜித் முதன் முறையாக மொபைலில் தானே செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
    Next Story
    ×