என் மலர்tooltip icon

    சினிமா

    ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
    X

    ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி

    தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான பூஜா காந்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டலில் தங்கியதற்கான ‘பில்’ தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்தியுள்ளார். #PoojaGandhi
    தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘கொக்கி’, சரத்குமார் நடித்த ‘வைத்தீஸ்வரன்’, அர்ஜூன் நடித்த ‘திருவண்ணாமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. பிறகு கன்னட படத்தில் நடிக்க தொடங்கிய அவர், அங்கு முன்னணி நடிகையாக உள்ளார்.

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் சேர்ந்தார். பிறகு அதில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2013-ம் ஆண்டு பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரெய்ச்சூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி மீண்டும் ஜனதாதள கட்சியில் சேர்ந்தார்.



    இவர் பெங்களூரு ஹைகிரவுண்ட் அசோகா ஓட்டலில் 2016-ம் ஆண்டு தங்கி உள்ளார். அதே நாளில் பா.ஜனதா பிரமுகரான அனில் மென்சினகாய் என்பவரும் அந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஓட்டல் வாடகை, சாப்பாட்டு செலவு ஆகியவற்றை இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வதாக கூறி இருந்தனர். ஆனால் ஓட்டல் வாடகையில் ரூ. 3 லட்சத்து 53 ஆயிரம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    ஓட்டல் நிர்வாகம் பலமுறை கூறியும், இருவரும் பணம் கட்ட மறுத்ததால் போலீசில் ஓட்டல் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர்.

    இதையடுத்து நடிகை பூஜாகாந்தியை அழைத்து போலீசார் விசாரித்தனர். முதற்கட்டமாக அவர் ரூ. 2 லட்சத்தை காவல் நிலையத்தில் செலுத்தி உள்ளார். #PoojaGandhi

    Next Story
    ×